திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் வார்டில் எழுந்த புகை…! அலறியடித்து ஓடிய பெற்றோர்…!

Default Image

திண்டுக்கல் மாவட்டம், பழனி அரசு மருத்துவமனையில், குழந்தைகள் வார்டில் புகை வந்ததால், அலறியடித்து ஓடிய பெற்றோர். 

திண்டுக்கல் மாவட்டம், பழனி அரசு மருத்துவமனையில், குழந்தைகள் வார்டில் புகை வந்துள்ளது.  இதனையடுத்து,அந்த வார்டில் இருந்த கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர் அலறியடித்துக் கொண்டு ஓடியுள்ளனர். இந்த புகையானது மின்கசிவு காரணமாக ஏற்பட்டதாக  தெரிவித்துள்ளனர்.

இந்த வார்டில் 70 குழந்தைகள் மற்றும் 30 கர்ப்பிணிகள் இருந்துள்ளனர். ஒரேநேரத்தில் அனைவரும் வெளியேறியதால், கண்ணாடி கதவுகள் உடைந்துள்ளது. உடனடியாக மருத்துவமனை அதிகாரிக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், புகை அணைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து, மின்கசிவை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்