புளியந்தோப்பு கட்டிடம் : இன்று முதல்வரிடம் அறிக்கை தாக்கல் செய்யும் நிபுணர் குழு…!

Default Image

நிபுணர் குழு புளியந்தோப்பு வீடுகளின் தரம் குறித்த முழுமையான அறிக்கையை முதல்வரிடம் அளிக்க உள்ளனர். 

சென்னை, புளியந்தோப்புப் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கே.பி.பார்க் பன்னடுக்கு குடியிருப்பு கட்டிடத்தில் சிமெண்ட் பூச்சு உதிர்வது குறித்து,அங்கு சமீபத்தில் குடியேறிய பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். சுமார் ரூ.112 கோடியே 60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கட்டிடம், கடந்த 2016-ல் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டது. இந்த கட்டிடத்தில் 864 வீடுகள் இருக்கின்றன.

குற்றசாட்டுகள் எழுந்ததை தொடர்ந்து, அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ.அன்பரசன் ஆய்வு மேற்கொண்டனர். இந்நிலையில், கட்டிடத்தின் தரத்தை ஐஐடி சிறப்பு குழு அமைக்கப்பட்டது. இதனிடையே, கட்டுமான குறைபாடு குறித்த தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேறியது. கவனக்குறைவாக இருந்த குற்றசாட்டில் குடுசை மாற்று வாரிய பொறியாளர்கள் இருவர் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கட்டிடத்தின் தரத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஐஐடி சிறப்பு குழு, கடந்த 17-ஆம் தேதி இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்த நிலையில், இன்று முதல்வரிடம் வீடுகளின் தரம் குறித்த முழுமையான அறிக்கையை அளிக்க உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்