மகன் மற்றும் பேத்திகளுடன் செந்தில்.! வைரலாகும் புகைப்படங்கள்.!

Default Image

நடிகர் செந்தில் தனது மகன் மற்றும் பேத்திகளுடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

தமிழ் சினிமாவில் முந்திய காலகட்டத்தில் செந்தில் பேசிய காமெடி கவுண்டர்களும், நடித்த நகைச்சுவைக் காட்சிகளும் இப்போதைய காலகட்டத்தில் மீம்ஸ் டெம்ப்ளேட்டாக மாறியுள்ளது. செந்தில் -கவுண்டமணி இருவரும் இணைந்து செய்யும் காமெடிக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உருவானது.

கடைசியாக செந்தில் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் செந்தில் ஹீரோவாக “ஒரு கிடாயின் கருணை மனு” படத்தை இயக்கிய இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கத்தில் நடிக்கிறார். தயாரிப்பாளர் சமீரா பரத் ராம் தயாரித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் செந்தில் தனது மகன் மற்றும் இரண்டு பேத்திகளுடன் கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அட நம்ம செந்தில் அவர்களின் பேத்திகளா இவர்கள் என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்..இதோ அந்த புகைப்படங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்