திமுகவில் அனைவருக்கும் வயதாகி விட்டதால், அதிமுகவில் இருப்பவர்களை வாடகைக்கும், விலைக்கும் வாங்குகின்றனர் – ஈபிஎஸ்

Default Image

திமுகவில் அனைவருக்கும் வயதாகி விட்டதால் அதிமுகாவில் இருப்பவர்களை வாடகைக்கும், விளக்கும் வாங்கியிருப்பதாக ஈபிஎஸ் விமர்சனம்.

தமிழகத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்,ஊராட்சி ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.

இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், சென்னையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவோருடன் ஆலோசனை நடத்தினர். அப்போது பேசிய அவர்,  திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 15 பேர் முன்னாள் அதிமுகவினர் என்றும், திமுகவில் அனைவருக்கும் வயதாகி விட்டதால் அதிமுக-வில் இருப்பவர்களை வாடகைக்கும், விலைக்கும் வாங்கியிருப்பதாக விமர்சித்துள்ளார். மேலும், திமுக அரசுக்கு சரியான தலைமையும், நிர்வாக திறமையும் இல்லை என அவர் குற்றம்சாட்டினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்