சார் தாம் யாத்திரைக்கு அனுமதி: உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம்..!

Default Image

உத்தரகண்ட் மாநிலத்தில் நடைபெறும் சார் தாம் யாத்திரைக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

சார் தாம் யாத்திரை என்பது உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்திரி  மற்றும் யமுனோத்திரி ஆகிய நான்கு கோயில்களுக்கும் யாத்திரை செல்வது ஆகும். வழக்கம் போல் இந்த ஆண்டும் இந்த யாத்திரையை நடத்த அம்மாநில அரசு முடிவெடுத்தது.

இது குறித்து இன்று உத்தரகண்ட் உயர் நீதிமன்றம்,  சார் தாம் யாத்திரை மீதான தடையை நீக்கி கொரோனா நெறிமுறைகளுடன் பக்தர்களை கோவிலுக்கு செல்ல அனுமதித்துள்ளது.  ஒரு நாளில் கேதார்நாத் டாமில் 800 பக்தர்களும், பத்ரிநாத் டாமில் 1200 பேரும், கங்கோத்ரியில் 600 பக்தர்களும், யமுனோத்ரி டாமில் 400 பக்தர்களும் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பக்தர்களுக்கு கட்டாயமாக கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் மற்றும் இரட்டை தடுப்பூசி சான்றிதழ் வழங்கியிருக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்