மரபணு ஆய்வகத்தை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

மரபணு ஆய்வகத்தை இன்று திறந்து வைக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

தமிழகத்தில் டெல்ட்டா பிளஸ் வைரஸை கண்டறியும் ஆய்வகத்தை அமைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவுறுத்தியிருந்த நிலையில், ரூ.4 கோடி செலவில் சென்னையில் மரபணு ஆய்வகம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான ஆய்வு கருவிகளும் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து இந்த மரபணு ஆய்வகத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதல்வர் இன்று திறந்து வைக்க உள்ளார்.இந்த ஆய்வகம் மூலம் டெல்டா, டெல்டா ப்ளஸ் வைரஸ் வகைகளை விரைவில் கண்டறியலாம். பெங்களூருவில் பயிற்சி பெற்ற 5 வல்லுநர்கள் சென்னை ஆய்வகத்தில் வைரஸ் மாதிரிகளை கண்டறிய உள்ளனர்.