சந்திரமுகி 2-வில் வைகைப்புயல் வடிவேலு..? அவரே கூறிய தகவல்..!

Default Image

சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் தான் நடிக்க வாய்ப்புள்ளதாக வடிவேலு தெரிவித்துள்ளார். 

இயக்குனர் பி வாசு இயக்கத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சந்திரமுகி. ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, பிரபு, விஜயகுமார், நாசர், வினீத் ராதாகிருஷ்ணன், சோனு சூட், போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் வித்தியாசாகர் இசையமைத்திருந்தார்.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகவுள்ளது. அதையும் இயக்குனர் பி வாசு இயக்குகிறார். அதில் ரஜினி நடித்த வேட்டையன் கதாபாத்திரத்தில் நடிகர் ராகவ லாரன்ஸ் நடிப்பார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், முதல் பாகத்தில் நடிகர் வடிவேலு (முருகேசன்) என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதைபோல் இரண்டாம் பாகத்திலும் நடிக்க வாய்ப்புள்ளதாக அவரே கடந்த சில நாட்களுக்கு முன்பு தெரிவித்துள்ளார்.

நீண்ட ஆண்டுகள் கழித்து நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் கதையை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ள படத்தின் மூலம் கதாநாயகனாக ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார்.

இந்த படத்தின் அறிவிப்பை இயக்குனர் சுராஜ் மற்றும் வடிவேலு பத்திரிக்கையாளர்களை சந்தித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தனர். அப்போது பேசிய வடிவேலு ” சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் நடிக்க வாய்ப்புள்ளது” என கூறியுள்ளார். விரைவில் சந்திரமுகி 2 அறிவிப்பு வெளியாகும் போது வடிவேலு நடிக்கும் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live today update
PutraHeight Malaysia Fire
street dogs
csk Ashwani Kumar
goods trains collide in Jharkhand
TNPSC Group 1 Mains Exam
aadhav arjuna - Charles jose martin