ஓடிக்கொண்டிருந்த பொழுது திடீரென தீ பிடித்த வேன் – 9 பேர் காயம்..!

உத்தர பிரதேச மாநிலத்திலுள்ள வேன் ஒன்று பயணம் செய்து கொண்டிருந்த பொழுதே தீ பிடித்து இருந்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பிரயாக்ராஜ்-அயோத்தி நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் எரிபொருள் நிரப்பிவிட்டு திரும்பிய பொழுது வேன் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த வேனில் இருந்த பயணிகள் பலர் இந்த தீவிபத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 9 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும், அவர்கள் அனைவரும் லக்னோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தீக்காயமடைந்தவர்களில் 8 பேர் பெண்கள் எனவும், ஒரு குழந்தை இருந்ததாகவும் போலீஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், தீக்காயமடைந்த ஒரு தாய் மற்றும் அவரது மகள் கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு வரை.!
April 8, 2025
காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்றது.., மழைக்கு வாய்ப்பு இருக்குதா? வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!
April 8, 2025
மெதுவா பந்து வீசுனா இதான் கெதி.! ஆர்சிபி கேப்டனுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்த பிசிசிஐ.!
April 8, 2025