நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட யூசுப் லக்டவாலா சிறையில் உயிரிழப்பு..!

Default Image

ரூ.50 கோடி நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பில்டர் மற்றும் திரைப்பட பைனான்சியர் யூசுப் லக்டவாலா சிறையில் இறந்தார்.

பிரபல மும்பையைச் சேர்ந்த பில்டரும், திரைப்பட பைனான்சியருமான யூசுப் லக்டவாலா ஆர்தர் சிறையில் காலமானார். லக்டவாலா அருகிலுள்ள மருத்துவமனைக்கு காவல்துறையினரால் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் முன்னதாக அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இவர் இறப்புக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.

பண மோசடி வழக்கில் யூசுப் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். குஜராத்தில் உள்ள அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு தப்பிச் செல்லத் தயாராக இருந்த யூசுப்பை அமலாக்கத்துறை கைது செய்தனர். யூசுப் லக்டவாலா புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்