வளர்ப்பு நாய்களைப் பதிவு செய்வது கட்டாயம் – இல்லையென்றால் அபராதம் ..!

கிழக்கு டெல்லியில் உள்ள மக்கள் தங்கள் செல்லப்பிராணி நாயை ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நீங்கள் கிழக்கு டெல்லியில் வாழ்ந்து ஒரு செல்லப்பிராணி நாயை வைத்திருந்தால், உங்கள் நாயை கிழக்கு டெல்லி மாநகராட்சி (EDMC) இல் பதிவு செய்ய வேண்டும். இதற்காக மாநகராட்சி ஒரு ஆன்லைன் போர்ட்டலின் வசதியைத் தொடங்கியுள்ளது. கிழக்கு டெல்லியில் வசிக்கும் மக்கள் தங்கள் செல்ல நாய்களை https://mcdonline.nic.in/vtlpetedmc/web/citizen/info என்ற லிங்கை கிளிக் செய்து பதிவு செய்து கொள்ளலாம் என்று கிழக்கு டெல்லி மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
பொதுமக்கள் தங்கள் நாய்களை பதிவு செய்யாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிழக்கு டெல்லி மாநகராட்சி எச்சரித்துள்ளது. இரண்டு மாதங்களுக்குள் தங்கள் வளர்ப்பு நாய்களை பதிவு செய்யுமாறு நாங்கள் பொதுமக்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளோம் என்று ஒரு மூத்த அதிகாரி கூறினார். அவ்வாறு செய்யத் தவறினால் அவர்கள் மீது கிழக்கு டெல்லி மாநகராட்சி சட்டத்தின்படி மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தெருநாய்களை செல்லப்பிராணிகளாக தத்தெடுத்தவர்களுக்கும் இந்த விதி பொருந்தும். மேலும், காணாமல் போன அல்லது கைவிடப்பட்ட செல்லப்பிராணிகளை உரிமையாளர்களிடம் திரும்ப ஒப்படைக்க, நாய்கள் பதிவு அதிகாரத்தால் வழங்கப்பட்ட காலர் (லீஷ்) அணிவதை கட்டாயமாக்க விரைவில் மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
டெல்லி மாநகராட்சி சட்டம் 1957 இன் கீழ், அனைத்து செல்ல நாய்களும் மாநகராட்சியில் பதிவு செய்வது கட்டாயமாகும். வளர்ப்பு நாய் நகராட்சி மாநகராட்சியில் பதிவு செய்யப்படாவிட்டால் உரிமையாளருக்கு அபராதம் விதிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024