டி20 உலகக்கோப்பையில் தமிழக வீரர்கள் இருவருக்கு வாய்ப்பு..!

Default Image

T20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பில் தமிழக வீரர்கள் அஸ்வின்,வருண்சக்கரவர்த்தி இடம் பெற்றுள்ளார்கள்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் டி-20 உலகக்கோப்பை போட்டி அக்டோபர் 17-ம் தேதி முதல்  நவம்பர் 14-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக இந்திய அணியின் வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. டி-20 உலகக்கோப்பை அணியில் தமிழக வீரர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் அஸ்வின் இருவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்திய அணியில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அஸ்வினுக்கு வாய்ப்பு சமீபகாலமாக கிடைக்கவில்லை. அதற்கு ஏற்றாற்போல தற்போது நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரிலும் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் அஸ்வின் டி20உலகக்கோப்பை அணியில் இடம்பெற மாட்டார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிசிசிஐ அணியில் சேர்ந்துள்ளது.

வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகிய இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. வாஷிங்டன் சுந்தருக்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்