எச்சரிக்கை…! உங்களது போனில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, ஏடிஎம் பின், ஆதார் கார்டு, பான் சேமித்து வைத்துள்ளீர்களா…?

Default Image

உங்களது போனில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, ஏடிஎம் பின், ஆதார் கார்டு, பான் சேமித்து தனியுரிமைக்கு தீங்கு விளைவிக்கக்கூடியதாக இருக்கும் என ஆய்வில் தகவல். 

பொதுவாகவே நம்மில் பெரும்பாலானோர், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, ஏடிஎம் பின், ஆதார் கார்டு, பான் கார்டு எங்களை நினைவில் வைத்துக் கொள்ள சிரமாக இருப்பதால், சிலர் எழுத்து வடிவில் தாளிலும், மற்றும் சிலர் தாங்கள் பயன்படுத்தும் போனிலும் சேமித்து வைப்பதுண்டு. இந்த பழக்கம் சில நேரங்களில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்.

அந்த வகையில், ஒரு ஆய்வில், இந்தியர்கள் தங்கள் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு ஏடிஎம் பின், ஆதார் அட்டை, பான் எண் மற்றும் பிற கடவுச்சொற்களை தொலைபேசி அல்லது மின்னஞ்சலில் சேமித்து வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தியாவை  பொறுத்தவரையில்,இணைய குற்றங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தனிப்பட்ட விவரங்களைப் பாதுகாப்பது முக்கியம், ஏனெனில் ஹேக்கர்கள் பெரும்பாலும் தனியார் விவரங்களைத் தவறாகப் பயன்படுத்துவதற்காக இந்த விவரங்களை குறிவைக்கிறார்கள்.

சமூக ஊடக தளமான லோக்கல்சர்கிள்ஸின் சமீபத்திய கணக்கெடுப்பு, பல பயனர்கள் தங்கள் வங்கி டெபிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு ஏடிஎம் பின், ஆதார் அட்டை, பான் எண் மற்றும் பலவற்றை சேமித்து வைக்க பாதுகாப்பற்ற முறைகளைப் பயன்படுத்துவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 393 மாவட்டங்களில் இருந்து 24,000 பதில்களை இந்த கணக்கெடுப்பு சேகரித்தது. இதில் 63 சதவிகிதம் ஆண்களும், 27 சதவிகிதம் பெண்களும் பதிலளித்தனர். கணக்கெடுப்பில் பங்கேற்றவர்களில் 29 சதவீதம் பேர் தங்கள் டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு ஏடிஎம் பின்னை ‘ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட’ நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்குக் கொடுத்ததாகக் கூறினர். 4 சதவீதம் பேர் அதை உள்நாட்டு ஊழியர்களிடம் கொடுத்ததாகவும், 65 சதவிகிதத்தினர் வேறு யாருடனும் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளவில்லை என்று கூறியுள்ளனர்.

மேலும், பயனர்கள் வங்கி கணக்கு விவரங்கள், டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு (சிவிவி) எண் அல்லது அவர்களின் ஏடிஎம் பின், ஆதார் அட்டை அல்லது பான் எண் போன்ற முக்கியமான தகவல்களை எவ்வாறு கையாளுகிறார்கள் என்ற விவரத்தையும் இந்த கணக்கெடுப்பை நடத்தியுள்ளது.

 அதில்,21 சதவிகிதத்தினர் தங்களது வங்கி கணக்கு விவரங்கள், டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு (சிவிவி) எண் அல்லது அவர்களின் ஏடிஎம் பின், ஆதார் அட்டை அல்லது பான் எண் போன்ற முக்கியமான தகவல்களை மனப்பாடம் செய்துள்ளதாகவும், 39 சதவிகிதத்தினர் தங்கள் கடவுச்சொற்களை தாளில் எழுத்து வடிவத்தில் சேமித்து வைத்திருப்பதாகவும், 33 சதவிகிதத்தினர் தங்கள் தொலைபேசிகள், மின்னஞ்சல் மற்றும் கணினியில் டிஜிட்டல் வடிவத்தில் தரவை சேமித்து வைத்திருப்பதாகவும்  கூறினார்.சுமார் 11 சதவிகிதம் பதிலளித்தவர்கள் தங்கள் தொலைபேசியின் தொடர்பு பட்டியலில் முக்கியமான தகவல்களை சேமித்து வைத்திருப்பதும் கணக்கெடுப்பில் தெரியவந்தது. எனவே இவ்வாறு தொலைபேசியில் மற்றும் மின்னஞ்சலில் சேமித்துவைப்பது தனியுரிமை பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்கக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்