#BREAKING: கோடநாடு – மேலும் 4 தனிப்படைகள் அமைப்பு..!

Default Image

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கூடுதல் விசாரணை நடத்துவதற்காக மேலும் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

கொலை, கொள்ளை:

நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது. இங்கு  கடந்த 2017 ஏப்ரல் 24-ஆம் தேதி நடந்த கொள்ளை சம்பவத்தில் பல பொருட்கள், கோப்புகள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் போது பாதுகாவலர் ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் சயான், மனோஜ், கனகராஜ் உள்ளிட்ட 11 பேர் மீது குற்றச்சாட்டப்பட்ட நிலையில் கனகராஜ்  மர்மமான முறையில் விபத்தில் பலியானார். பின்னர், இந்த வழக்கில் சயான், மனோஜ் உள்ளிட்ட 10 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டு இந்த வழக்கு கடந்த 4 ஆண்டுகளாக உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

விசாரணை: 

கடந்த ஆகஸ்ட் மாதம் 13-ஆம் தேதி இந்த வழக்கில் கூடுதலாக சில தகவல்கள் கிடைத்து இருப்பதாக மேலும்  ஒரு முறை விசாரணை நடத்த வேண்டும் என்று போலீசார் உதகை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி விசாரணை நடத்த அனுமதி வழங்கினார். பின்னர், போலீசார் ஆகஸ்ட் 16-ஆம் தேதி போலீசார் சயானுக்கு சம்மன் அனுப்பி 17-ஆம் தேதி விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய சாட்சிகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தனிப்படை அமைப்பு:

இந்நிலையில், இந்த]வழக்கில் நேற்று ஒரு தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில், இன்று புதியதாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஏ.டி.எஸ்.பி கிருஷ்ணமூர்த்தி, டி.எஸ்.பி.க்கள் சந்திரசேகர், சுரேஷ் மற்றும் ஆய்வாளர் வேல்முருகன் உள்ளிட்டோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரிக்க இதுவரை 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தனிப்படையிலும் ஒரு எஸ்.ஐ உட்பட 5 போலீசார் இடம்பெற்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 07042025
Rahul Gandhi
Edappadi Palanisamy - MK Stalin
R Ashwin
edappadi palaniswami sengottaiyan
TN BJP Leader Annamalai - BJP MLA Nainar Nagendran
UttarPradesh - Mosque