வாழைப்பூ அடை எப்படி செய்வது தெரியுமா…? வாருங்கள் அறியலாம்!

Default Image

வாழைப்பூவில் அதிக அளவு பொட்டாசியம் மற்றும் வைட்டமின் பி நிறைந்துள்ளது. இந்த வாழைப்பூவை வாரம் ஒரு முறை எடுத்துக் கொள்வதால் உடலுக்கு உற்சாகமும், சுறுசுறுப்பும் கிடைக்கும். மேலும் இது மலச்சிக்கல் பிரச்சனையைப் போக்கும் சிறந்த இயற்கை உணவாக இருக்கும். இந்த வாழை பூவை வைத்து எப்படி காலை உணவுக்கு ஏற்ற அடை செய்வது என்பது குறித்து இன்று நாம் தெரிந்துக்கொள்வோம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

  • இட்லி அரிசி
  • கடலைப்பருப்பு
  • துவரம்பருப்பு
  • மஞ்சள்தூள்
  • பெருங்காயத்தூள்
  • வாழைப்பூ
  • கருவேப்பிலை
  • காய்ந்த மிளகாய்
  • இஞ்சி
  • கடுகு
  • சின்ன வெங்காயம்
  • எண்ணெய்
  • உப்பு

செய்முறை

அரைக்க : முதலில் அரிசி, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு மற்றும் ஆறு மிளகாய் சேர்த்து 2 மணி நேரம் நன்றாக ஊற வைத்துக் கொள்ளவும். பின்பு இவற்றை கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

தாளிக்க : வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து நன்றாக தாளித்து கொள்ளவும். அதனுடன் சின்ன வெங்காயம், பெருங்காயத்தூள், இஞ்சி, மஞ்சள் தூள் மற்றும் நறுக்கி வைத்துள்ள வாழைப்பூ சேர்த்து நன்றாக வதக்கவும். பின் இவற்றை மாவுடன் கலந்து விடவும்.

அடை : தோசை கல்லை காய வைத்து அதில் எண்ணெய் தடவி நாம் கலந்து வைத்துள்ள மாவை அடை போல ஊற்றவும். அதன் பின் அதை சுற்றி எண்ணெய் விட்டு இருபுறமும் வேக வைத்து எடுத்தால் அட்டகாசமான வாழைப்பூ வடை தயார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்