டோக்கியோ பாராலிம்பிக்ஸ் ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் SH1 இறுதிப் போட்டியில் இந்தியாவின் சிங்ராஜ் அதானா வெண்கலம் வென்றுள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது.அதன்படி,பாராலிம்பிக் போட்டிகளில் இதுவரை இந்தியா 2 தங்கம், 4 வெள்ளி, 1 வெண்கலம் என 7 பதக்கங்களை பெற்றுள்ளது.
இந்நிலையில்,இன்று நடைபெற்ற பாராலிம்பிக்ஸ் ஆண்கள் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் SH1 இறுதிப் போட்டியில் இந்தியாவின் சிங்ராஜ் அதானா 216.8 மதிப்பெண்களைப் பெற்று வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.இதனால்,இந்தியா தனது பதக்க பட்டியலில் 8 வது பதக்கத்தை சேர்த்துள்ளது.
What a comeback from #IND‘s Singhraj ????
Another #Bronze added to ????????’s tally, as he scores 216.8, just behind #CHN‘s top 2, to claim the nation’s 8️⃣th medal at the #Paralympics! #ShootingParaSport #Tokyo2020
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) August 31, 2021