கேரளாவில் யானை தாக்கி இருவர் பலி..!

Default Image

கேரள மாநிலம் திரிச்சூரில் யானை தாக்கியதில் இருவர் பலியாகியுள்ளனர்.

திரிச்சூரில் உள்ள பலப்பிள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சைனுதீன்(50). இவரை நேற்று இரவிலிருந்து காணவில்லை என்பதால் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இவரது உடல் பலத்த காயங்களுடன் அருகில் உள்ள கணபதி கோவிலில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அதேபகுதியை சேர்ந்த மேலும் ஒரு நபரான பீதாம்பரம் விடியற்காலை 5.30 மணியளவில் வீட்டை விட்டு கிளம்பியுள்ளார்.

ரப்பர் தொழிலாளியான இவர் 6.30 மணியளவில் ரப்பர் தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த இருவரின் அடையாளங்களை வைத்து இவர்கள் யானை தாக்கி இறந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்