புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 3வது நாள் கூட்டம் தொடங்கியது!

Default Image

புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது.

புதுச்சேரி மாநிலத்தின் 15 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் கடந்த 26ம் தேதி தொடங்கி, அன்று மாலை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி, பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்தார்.

அதன்படி, 2021-22-ம் ஆண்டின் வரவு செலவு திட்ட மதிப்பீடாக ரூ.9,924.41 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதுவையின் நிலுவைக் கடன் தொகை ரூ.9,334.78 கோடி. இந்திய அளவில் சராசரி உள்நாட்டு உற்பத்தி 7 – 8% இருக்கும் நிலையில் புதுவையின் வருவாய் 10% வளர்ச்சி பெற்றுள்ளது என தெரிவித்தார்.

இதன்பின் பல்வேறு திட்டங்கள், சலுகைகள் மற்றும் துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு உள்ளட்டவற்றை தாக்கல் செய்தார். இந்த நிலையில், புதுச்சேரி சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 3வது நாள் கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. இந்த கூட்டத்தில் நிதிநிலை அறிக்கை மீது விவாதம் நடைபெறுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்