செப்.1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை.
தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி தற்போது தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில் தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து, இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்னும் சற்று நேரத்தில் தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.