BankHolidays : செப்டம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு எத்தனை நாட்கள் விடுமுறை தெரியுமா? விவரம் இதோ…!

Default Image

செப்டம்பர் மாதத்தில் வங்கிகளுக்கு எந்தெந்த நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

இன்று ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் வங்கி என்பது ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது. நாம் பணப் பரிவர்த்தனைகளை செய்வதற்கும் மற்றும் பல தேவைகளுக்கு வங்கிகளை தான் நாடி செல்கிறோம். எனவே இந்த வங்கிகளின் செயல்பாடு குறித்து நாம் அறிந்துகொள்ள வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். அந்த வகையில், செப்டம்பர் மாதம் வங்கிகளுக்கு 13 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது.  அந்த வகையில், செப்டம்பர் மாதத்தில் எந்தெந்த நாட்களெல்லாம் வங்கிகளுக்கு விடுமுறை என்பது பற்றி பார்ப்போம்.

செப்டம்பர் (2021) வங்கி விடுமுறை நாட்கள் :

  • 08 செப்டம்பர் 2021: ஸ்ரீமந்த சங்கரதேவரின் திதி
  • 09 செப்டம்பர் 2021: தீஜ் (ஹரித்தாலிகா)
  • 10 செப்டம்பர் 2021: விநாயகர் சதுர்த்தி/சம்வத்சரி (சதுர்த்தி பக்ஷ)/விநாயகர் சதுர்த்தி/வரசித்தி விநாயக விரதம்
  • 11 செப்டம்பர் 2021: விநாயகர் சதுர்த்தி (2 வது நாள்)
  • 17 செப்டம்பர் 2021: கர்ம பூஜை
  • 20 செப்டம்பர் 2021: இந்திரஜத்ரா
  • 21 செப்டம்பர் 2021: ஸ்ரீ நாராயண குரு சமாதி நாள்

வார இறுதி நாட்கள் விடுமுறை 

  • 05 செப்டம்பர் 2021 – வாராந்திர விடுமுறை (ஞாயிறு)
  • 11 செப்டம்பர் 2021 – இரண்டாவது சனிக்கிழமை
  • 12 செப்டம்பர் 2021 – வாராந்திர விடுமுறை (ஞாயிறு)
  • 19 செப்டம்பர் 2021 – வாராந்திர விடுமுறை (ஞாயிறு)
  • 25 செப்டம்பர் 2021 – நான்காவது சனிக்கிழமை
  • 26 செப்டம்பர் 2021 – வாராந்திர விடுமுறை (ஞாயிறு)

செப்டம்பர் 8 ஆம் தேதி, கவுஹாத்தியில் உள்ள வங்கிகள் மட்டுமே ஸ்ரீமந்த சங்கரதேவரின் திதியை முன்னிட்டு விடுமுறை தினமாக அனுசரிக்கப்படும். செப்டம்பர் 9 ஆம் தேதி, தீஜ் (ஹரித்தாலிகா) காரணமாக கேங்டாக்கில் உள்ள வங்கிகள் மூடப்படும்.

செப்டம்பர் 10 அன்று, அகர்தலா, ஐஸ்வால், போபால், சண்டிகர், டேராடூன், காங்டாக், கவுகாத்தி, இம்பால், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொச்சி, கொல்கத்தா, லக்னோ, புது டெல்லி, பாட்னா, ராய்பூர், ராஞ்சி, ஷில்லாங், சிம்லா, ஸ்ரீநகர் மற்றும் திருவனந்தபுரம் தவிர பெரும்பாலான மாநிலங்களில் வங்கிகள் மூடப்படும்.

செப்டம்பர் 11 அன்று, பனாஜியில் உள்ள வங்கிகள் கர்ம பூஜையை முன்னிட்டு விடுமுறையைக் கடைப்பிடிக்கும். செப்டம்பர் 17 அன்று, ராஞ்சியில் மட்டும் வங்கி விடுமுறை இருக்கும். செப்டம்பர் 20 அன்று, இந்திரஜத்ராவின் காரணமாக கேங்டாக்கில் உள்ள வங்கிகள் மட்டுமே மூடப்படும். செப்டம்பர் 20 ஆம் தேதி, ஸ்ரீ நாராயண குரு சமாதி தினத்தையொட்டி கொச்சியும், திருவனந்தபுரமும் மட்டுமே வங்கி விடுமுறையைக் கடைப்பிடிக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live - 18042025
Shine Tom Chacko
tamilnadu rain
sivakumar about Suriya
TVK Leader Vijay Speech
virender sehwag virat kohli Rajat Patidar
TVK Meeting