தூண்டில் வளைவு அமைத்து தரக்கோரி ஆதார், குடும்ப அட்டைகளை சாலையில் வீசி மீனவர்கள் போராட்டம்..!

கடல் அரிப்பால் வீடுகள் சேதம் அடைவதைத் தடுக்க தமிழ்நாடு அரசு தூண்டில் வளைவு அமைத்து தரக்கோரி மீனவர்கள் போராட்டம்.

புதுச்சேரி ஒட்டி தமிழக பகுதியான பிள்ளைசாவடியில் கடல் அரிப்பால் வீடுகள் சேதம் அடைவதைத் தடுக்க தமிழ்நாடு அரசு தூண்டில் வளைவு அமைத்து தரக்கோரி விழுப்புரத்தில் மீனவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் ஆதார் மற்றும் குடும்ப அட்டைகளை சாலையில் வீசி மீனவர்கள் குடும்பத்தினருடன் போராட்டம் நடத்தினர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்களுடன் விழுப்புரம் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத்தொடர்ந்து மீனவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். தங்களின் கோரிக்கையை குறைந்த நாட்களில் நிறைவேற்றப்படவில்லை என்றால் படகுகள் மற்றும் வலைகளை மீண்டும் ரோட்டில் போட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

author avatar
murugan