#BREAKING : புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல்…!

 புதுச்சேரி சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார்.

இன்று புதுச்சேரியில் 15-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் புதுச்சேரி சட்டப்பேரவை வரலாற்றில் முதல்முறையாக, திருக்குறளை மேற்கோள்காட்டி தமிழில் உரையாற்றினார்.

அதனை தொடர்ந்து, புதுச்சேரியின் துணை சபாநாயகராக என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜவேலு அவர்கள் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், நிதித்துறை பொறுப்பில் உள்ள புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்கள் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார்.

2021-2022-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து உரையாற்றி வரும் ரங்கசாமி அவர்கள் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என  தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சிறப்பாக பணியாற்றி வரும் முன்கள பணியாளர்களுக்கு பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, செப்டம்பர் 3-ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுநர் தமிழிசையின் பட்ஜெட் உரைக்கு  சட்டப்பேரவையில் நாளை நன்றி தெரிவிக்கப்பட உள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.