நீண்ட போராட்டத்திற்கு பிறகு முதல் விக்கெட் பறித்த இந்தியா..!

இங்கிலாந்து அணி 2 விக்கெட்டை இழந்து 68 ஓவர் முடிவில் 182 ரன்கள் எடுத்து 104 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

இந்தியா- இங்கிலாந்து அணிகளிடையே 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதைத்தொடர்ந்து, களமிறங்கிய இந்திய அணி 40.4 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டை இழந்து 78 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன், கிரேக் ஓவர்டன் தலா 3, ராபின்சன், சாம்கரண் தலா 2 விக்கெட்டை பறித்தனர்.

பின்னர், தனது முதல் இன்னிங்ஸை இங்கிலாந்து தொடங்கியது. தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ், ஹசீப் ஹமீது இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கத்திலே இருந்து இருவரும் சிறப்பாக விளையாடினார். இறுதியாக முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 42 ஓவர் முடிவில் விக்கெட்டை இழக்காமல் 120 ரன்கள் எடுத்தனர். களத்தில் ரோரி பர்ன்ஸ் 52*, ஹசீப் ஹமீது 60* ரன்களுடன் இருந்தனர்.

இவர்களின் விக்கெட்டை பறிக்க முதல் நாளில் இந்திய அணி திணறியது. இந்நிலையில், இன்று 2-ம் நாள் ஆட்டம் தொடங்கியது. சில நிமிடங்களில் 49.6 பந்தில் ரோரி பர்ன்ஸ் 61 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார். இவர்கள் கூட்டணியில் மொத்தமாக 135 ரன்கள் எடுத்தனர். இருவரும் மொத்தமாக 300 பந்துகளை எதிர்கொண்டனர். பின்னர், அடுத்த சில ஓவரில் ஹசீப் ஹமீது 68 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

தற்போது இங்கிலாந்து அணி 2 விக்கெட்டை இழந்து 68 ஓவர் முடிவில் 182 ரன்கள் எடுத்துள்ளனர். இதனால், இங்கிலாந்து அணி 104 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

author avatar
murugan