78 ரன்னில் அனைத்து விக்கெட்டையும் இழந்த இந்திய அணி..!

Default Image

இந்திய அணி 40.4 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டை இழந்து 78 ரன்கள் எடுத்துள்ளனர்.

இந்தியா- இங்கிலாந்து அணிகளிடையே 3-வது டெஸ்ட் போட்டி லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதைத்தொடர்ந்து, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் , கே.எல் ராகுல் இருவரும் களமிறங்கினர். ஆனால் ஆட்டம் தொடக்கத்திலே கே.எல் ராகுல் ரன் எடுக்காமல் வெளியேறினார். அடுத்து களம் கண்ட புஜாரா 1 ரன் எடுத்து விக்கெட்டை இழந்தார்.

அடுத்தடுத்து விக்கெட் இழந்ததால் கேப்டன் கோலி முதல் 2 போட்டிகளில் சரியாக விளையாடாததால் இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தனர். ஆனால், 7 ரன் எடுத்து விராட் பெவிலியன் திரும்பி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தார். பின்னர், ரோஹித் , ரகானே இருவரும் நிதானமாக விளையாட அணி சரிவில் இருந்து மீண்டு வரும் என எதிர்ப்பட்ட நிலையில், ரகானே 18 ரன் எடுத்து விக்கெட்டை இழக்க பின்னர் களம் கண்ட ரிஷாப் பண்ட் 2, ஜடேஜா 4, இஷாந்த் சர்மா 8 , ஷமி, பும்ரா ரன் எடுக்காமலும் விக்கெட்டை அடுத்தடுத்து இழந்தனர்.

இதனால், இந்திய அணி 40.4 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டை இழந்து 78 ரன்கள் எடுத்துள்ளனர். இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் ஆண்டர்சன், கிரேக் ஓவர்டன் தலா 3, ராபின்சன், சாம்கரண் தலா 2 விக்கெட்டை பறித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்