#breaking: பஞ்சாயத்து தலைவர்களுக்கு மாத ஊதிய உயர்வு – அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு!

Default Image

பஞ்சாயத்து தலைவர்களின் மாத ஊதியம் ரூ.10,00ல் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்படுகிறது என்று அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு.

தமிழக சட்டப்பேரவையில் பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், ஊராட்சி மன்ற தலைவர்களின் மாத ஊதியம் ரூ.10,00ல் இருந்து ரூ.2,000 ஆக உயர்த்தப்படுகிறது என்று அறிவித்துள்ளார்.

ஊதிய உயர்வு மூலம் தமிழக்தில் 12,000க்கும் மேற்பட்ட ஊராட்சி தலைவர்கள் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராமங்களுக்கு முன் மாதிரி கிராம விருது வழங்கப்படும் என்றும் சிறப்பாக செயல்படும் சமுதாயம் சார்ந்த அமைப்புகளுக்கு மணிமேகலை விருது வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்