நீண்ட வருடங்களுக்கு பிறகு பிரித்திவிராஜின் ஜோடியாகும் நயன்தாரா..?

Default Image

பிரித்திவிராஜிக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. 

மலையாளத்தில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரித்திவிராஜ், மோகன்லாலை வைத்து லூசிஃபர் எனும் திரைப்படத்தை இயக்கி நல்ல இயக்குனராகவும் தன்னை நிரூபித்துவிட்டார். இவர் தற்போது கைவசம் ஏகப்பட்ட மலையாள திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.

இந்நிலையில், இவர் ப்ரேமம் படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்க கதை கேட்டுள்ளாராம். அந்த கதையும் பிரிதிவிராஜிற்கு பிடித்துவிட்டதாம். இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். இந்த தகவல் உறுதியானால், 6 வருடங்களுக்கு பிறகு நயன்தரா பிரிதிவிராஜ் திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான நெற்றிக்கண் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக ரஜினியின் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை தொடர்ந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்