6 கோடி தடுப்பூசி செலுத்திய முதல் மாநிலம்..!

Default Image

உத்திரப்பிரதேச மாநிலத்தில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தியதில் 6 கோடிக்கும் அதிகமாக செலுத்திய முதல் மாநிலமாக திகழ்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.  இதில் பல்வேறு மாநிலங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் உத்திரப்பிரதேச மாநிலத்தில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தியவர்கள் எண்ணிக்கை 6 கோடியை விட அதிகரித்துள்ளது.

இதுவரை உத்திரப்பிரதேச மாநிலத்தில் முதல் தவணையாக 5,07,22,629 பேரும், இரண்டாவது தவணையாக 94,27,421 பேரும் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். அதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் 23.67 லட்சம் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.  இதனால் இந்தியாவில் 6 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்திய முதல் மாநிலமாக உத்திரபிரதேசம் திகழ்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்