கேரளாவில் புதிதாக 20,452 பேருக்கு கொரோனா..!

Default Image

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 20,452 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யபட்டுள்ளது.

கேரள சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது, கடந்த 24 மணி நேரத்தில் 20,452 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36,52,090 ஆக அதிகரித்துள்ளது. இன்று கேரளாவில் 114 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் அம்மாநிலத்தில் மொத்தமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 18,394 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 16,856 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 34,53,174 பேர் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 1,80,000 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்