சீனாவில் ஏற்பட்ட பலத்த மழையால் 21 பேர் உயிரிழப்பு..!

Default Image

சீனாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது, இதனால் தற்போது 21 பேர் உயிரிழந்துள்ளனர். 

சீனாவில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்றும் இன்றும் இந்நாட்டின் மத்திய மாகாணங்களில் உள்ள இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதில் ஹூபெய் நகரில் அளவுக்கு அதிகமாக 503 மி.மீ. மழை பெய்ததால் நகரம் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் ஆபத்தான பகுதியிலிருந்து கிட்டத்தட்ட 8 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

இந்த கனமழையால் தற்போது 21 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 4 பேர் காணாமல் போய் உள்ளனர். அதேபோல் சீனாவில் மழை இன்னும் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மழை  வெள்ளத்தால் இதுவரை கடந்த ஒரு மாதத்தில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்