தமிழ்நாடு மீனவர்கள் நலனுக்காக ரூ.1,149 கோடி செலவிடப்படும்- நிதியமைச்சர் ..!

Default Image

தமிழ்நாடு மீனவர்கள் நலனுக்காக ரூ.1,149 கோடி செலவிடப்படும். 

காகிதமில்லா பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து பேசி வருகிறார். அதில், தமிழ்நாடு மீனவர்கள் நலனுக்காக ரூ.1,149 கோடி செலவிடப்படும்.  காசிமேடு மீன்பிடி துறைமுகம் ரூபாய் 150 கோடியில் மேம்படுத்தப்படும். புதியதாக 6 இடங்களில் மீன்பிடித் துறைமுகம் அமைக்க 6.2 கோடி செலவில் ஆய்வுகள் அமைக்கப்படும்.

கடல்சார் மீனவர்களுக்கான திட்டத்திற்கு ரூபாய் 303.66 கோடி ஒதுக்கீடு, கடற்பாசி வளர்ப்பு, கூண்டுகளில் மீன் வளர்ப்பு உள்ளிட்ட மற்றும் வாழ்வாதாரம் ஊக்குவிக்கப்படும்.  தமிழ்நாட்டில் 6 இடங்களில் புதிய மீன்பிடி துறைமுகங்கள், இறங்கு தளங்கள் அமைக்க ரூபாய் 483 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்