ஆற்றில் அழகர் இறங்குவதை முன்னிட்டு..!!வைகையில் நாளை தண்ணீர் திறக்கப்படுகிறது..!!

Default Image

மதுரை சித்திரை திருவிழாவுக்காக வைகை அணையில் இருந்து நாளை தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

மதுரை சித்திரை திருவிழா கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சிக்காக ஆண்டுதோறும் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது கடந்த ஆண்டு அணையில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக தண்ணீர் திறக்க படவில்லை ஆனால் சில நாட்களாக பெரியாறு அணையிலிருந்து வைகை அணைக்கு நீர்வரத்து தொடந்து வருவதால் அணையின் நீர்மட்டம் நேற்று 37.96 அடியாக இருந்தது  மொத்தம் 71 அடி என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை,ஆண்டிபட்டி,சேடபட்டி ஆகிய ஊர்களின் குடிநீர் தேவைக்காக 48 கன நீர் வெளிடயேற்றப்படுகிறது ஏப்ரல் 30ம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்குவதால் வைகை அணையிலிருந்து நாளை காலை 6.00 மணிக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது என பொதுத்துறை அறிவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்