இன்று பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் கலைவாணர் அரங்கிற்கு வந்தடைந்தார் முதல்வர்…!

Default Image

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது வீட்டில் இருந்து புறப்பட்டு, கலைவாணர் அரங்கிற்கு வந்தடைந்தார்.

திமுக தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற பின்,  தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் இன்னும் சற்று நேரத்தில் செய்யப்படுகிறது. இன்று காலை 10 மணிக்கு சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில், தமிழக பட்ஜெட் கூட்ட தொடர் இன்று தொடங்கி செப்.21ம் தேதி வரை நடைபெறுகிறது. நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தனது முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார்.  அந்த வகையில், தமிழகத்தில் முதல்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதனையடுத்து, பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் மீதான விவாதம் 16-ம் தேதி தொடங்குகிறது.

இனையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது வீட்டில் இருந்து புறப்பட்டு, கலைவாணர் அரங்கிற்கு வந்தடைந்தார். மேலும், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் உறுப்பினர்களும் சட்ட பேரவைக்கு வருகை தந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்