நாளை விண்ணில் பாயும் ‘GSLV F – 10’ ராக்கெட்டிற்கான கவுன்டவுன் தொடக்கம்..!

Default Image

நாளை விண்ணில் பாயும் ‘GSLV F – 10’ ராக்கெட்டிற்கான கவுன்டவுன் தொடக்கமாகியுள்ளது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் ஆய்வு மையத்தில் இன்று அதிகாலை 3.43 மணிக்கு பூமியை ஆய்வு செய்யும் செயற்கோளை சுமந்தவாறு ‘GSLV F – 10’ ராக்கெட்டிற்கான கவுன்டவுன் தொடங்கியுள்ளது. விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, பூமியை கண்காணிக்கும் EOS – 3 என்ற செயற்கைக்கோளை உருவாக்கியுள்ளது.

இந்த செயற்கைக்கோள் பூமியின் இயற்கை பேரழிவு, வனவியல், விவசாயம், கனிமவியல், பேரிடர் எச்சரிக்கை ஆகியவற்றை அறிந்துகொள்ள இந்த செயற்கைக்கோள் உதவும். EOS – 3 செயற்கோளை பூமியை கணிப்பதில் துல்லியமானது என்பதால் வானில் இருக்கக்கூடிய கண் என்று அழைக்கப்படுகிறது. EOS – 3 செயற்கைக்கோள் 2,268 கிலோ எடை கொண்டது, மேலும் இதன் ஆயுட்காலம் 10 ஆண்டுகளாகும்.

சதீஸ்தவான் ஆய்வு மையத்தில் உள்ள இரண்டாவது ஏவுதளத்தில் இந்த செயற்கைக்கோள் நாளை அதிகாலை 5.43 மணிக்கு விண்ணில் ஏவவுள்ளது. மேலும், GSLV F-10 ராக்கெட் மூலமாக செலுத்தப்பட உள்ள இந்த செயற்கைகோளில் முதல்முறையாக வெப்பத்தில் இருந்து செயற்கைக்கோளை பாதுகாப்பதற்காக 4 மீட்டர் விட்டம் கொண்ட கூம்பு வடிவம் கொண்ட வெப்பத் தகடு பொருத்தப்பட்டுள்ளது.

இந்த ‘EOS -3’ என்ற செயற்கைகோள் பூமியின் மேற்பரப்பில் இருந்து 36,000 கிலோ மீட்டர் தூரத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. GSLV ரகத்தின் உள்ள ராக்கெட்டின் மூலமாக செலுத்தப்பட உள்ள 14ஆவது செயற்கைக்கோள்  இது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்