நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக தெரிவித்த நயன்தாரா..!

Default Image

பிரபல நடிகை நயன்தாரா, தனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

தென் இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. தற்போது இவரது நடிப்பில் நெற்றிக்கண் என்ற திரைப்படம் ஆகஸ்ட் 13 ஆம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.

கோலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான காதல் ஜோடிகளாக நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை கூறலாம். 2015ல் வெளியான நானும் ரவுடி தான் படத்தின் மூலம் தான் இவர்கள் இருவரின் காதல் ஆரம்பித்தது என்பது அனைவரும் அறிந்ததே. இவர்களது திருமணம் விரைவில் இருக்கும் என்று தற்போது கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் நயன்தாரா டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.

அப்போது அவரிடம், கையில் அணிந்திருக்கும் மோதிரம் பற்றி கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அப்போது அந்த மோதிரம் குறித்து தெரிவித்துள்ள நயன்தாரா, இது என் நிச்சயதார்த்த மோதிரம். எனக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Saidai duraisamy
Carlsen Anna Cramling
Kolkata Knight Riders vs Lucknow Super Giants
tamilisai tvk vijay
sunil gavaskar rohit sharma mi
Chennai High Court tn government