பழங்குடியின மக்களுடன் இணைந்து நடனமாடிய மேற்குவங்க முதல்வர் மம்தா..!

உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பழங்குடியின மக்களுடன் இணைந்து நடமாடிய மம்தா பானர்ஜி.

மம்தா பானர்ஜி அவர்கள் மேற்கு வங்க முதல்வராக பொறுப்பேற்றது முதல், மக்களுக்கான பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், உலக பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு, மாநிலத்தில் ஜார்கிராமில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் கலந்து கொண்டார்.

அப்போது அங்கு பழங்குடியினரின் ஆடை கலாச்சாரத்தை போன்று, உடையணிந்து பழங்குடியின கலைஞர்களுடன் இணைந்து நடனமாடினார். மேலும், அவர்களது பாரம்பரிய மேள வார்த்தியதையும் இசைத்து அங்கு கூடியிருந்த பழங்குடியின மக்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.