அண்ணாமலை பிரதமர் மோடி வீட்டின் முன்பு தான் உண்ணாவிரதம் இருந்திருக்க வேண்டும் – கே.எஸ்.அழகிரி

Default Image

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், பிரதமர் மோடி வீட்டிற்கு முன்போ, நாடாளுமன்ற வளாகத்திற்கு முன்போ, மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திற்கு முன்போ தான் உண்ணாவிரதம் இருந்திருக்க வேண்டும்.

சிதம்பரத்தில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய முக்கிய நிர்வாகிகள் சிலர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்களின் தலைமையில், காங்கிரஸ் கட்சியில்  இணைந்தனர்.

இந்த நிகழ்விற்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கே.எஸ்.அழகிரி அவர்கள், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் பாஜகவிடம் நெருக்கம் காட்டுவதால், பலரும் அந்த கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைவதாக கூறினார்.

மேலும் அவர் கூறுகையில், மேகதாது அணை விவகாரத்தில் வரைவு திட்ட அறிக்கையை கர்நாடகா அரசு தயாரிக்க மத்திய அரசு அனுமதி அளித்ததை சுட்டி காட்டி பேசிய அவர், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், பிரதமர் மோடி வீட்டிற்கு முன்போ, நாடாளுமன்ற வளாகத்திற்கு முன்போ, மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்திற்கு முன்போ தான் உண்ணாவிரதம் இருந்திருக்க வேண்டும். காவிரி டெல்டாவில் வந்து அவர் உண்ணாவிரதம் இருந்தது பொருளற்ற ஒன்று. யாரை ஏமாற்ற பார்க்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்