ஆயிரத்தில் ஒருவன் 2 தயாரிப்பாளர் யாருனு கொஞ்சம் கேட்டு சொல்லுங்கள் – செல்வராகவன் காட்டம்.!

Default Image

ஆயிரத்தில் ஒருவன் 2 படம் கைவிடப்பட்டது என்று பரவும் தகவலுக்கு முற்று புள்ளி வைத்துள்ளார். 

தமிழ் சினிமாவில் மிகவும் வித்தியாசமான கதைகளை அருமையாக படம் இயக்கும் இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் செல்வராகவன். இவர் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். இந்த படம் அப்பொழுது கொண்டாடப்படவில்லை என்றாலும் இப்போது தமிழ் சினிமாவில் சிறந்த படங்களில் ஒன்றாக விளங்குகிறது.

இந்த படத்திற்கான இரண்டாவது பாகம் எப்போது உருவாகும் என்று அணைத்து ரசிகர்களும் காத்திருந்த நிலையில், இயக்குனர் செல்வராகவன் கடந்த ஜனவரி மாதம் 1 ஆம் தேதி ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தில் நடிகர் தனுஷ் நடிப்பதாகவும் படத்திற்கான படப்பிடிப்பை 2024 ஆம் ஆண்டு தொடங்குவதாகவும் அறிவித்திருந்தார்.

அதனை தொடர்ந்து  படத்தி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்த நிலையில், நெட்டிசன்கள் ஆயிரத்தில் ஒருவன் 2 திரைப்படம் கைவிடப்பட்டதா என்று கூறிவருகிறார்கள். இதற்கு பதிலடி கொடுத்த இயக்குனர் செல்வராகவன் ட்வீட்டரில் ” படத்தின்  தயாரிப்பு பணிகள் எப்போது நடந்தது என்று சொல்ல முடியுமா.? படத்தின் தயாரிப்பாளர் யார் என்று கூறமுடியுமா.? தயவு செய்து உங்கள் நம்பகத்தன்மையான ஆட்களிடம் கேட்டு சொல்லுங்கள் ” என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
tamilisai tvk vijay
sunil gavaskar rohit sharma mi
Chennai High Court tn government
China chips
KKR VS LSG IPL 2025
Free bus for men - Minister Sivasankar says