காங்கோ ஏரியில் படகு கவிழ்ந்து சிறுவர்கள் உட்பட 11 பேர் பலி..!

Default Image

காங்கோ ஏரியில் படகு கவிழ்ந்ததால் அதிலிருந்த சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று காங்கோ. இதன் கிழக்கு பகுதியில் டான்கன்யிகா மாகாணத்தில் பிரபல டான்கன்யிகா ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் படகு சவாரி மிகவும் பிரபலமாகும் என்பதால் நேற்று முன்தினம் 80க்கும் மேற்பட்ட  பேர் படகு சவாரியில் ஈடுபட்டுள்ளனர்.

படகு ஏரியில் மையத்தில் சென்ற பிறகு படகு கவிழ்ந்துள்ளது. இதன் காரணத்தால் படகில் உள்ள அனைவரும் நீரில் மூழ்கியுள்ளனர். அந்த சமயத்தில் இதன் அருகில் ஒரு படகில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் இதனை கண்டு இவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது நீரில் தத்தளித்து கொண்டிருந்த 76 பேர் மீட்கபட்டுள்ளனர். மேலும் சிறுவர்கள் உட்பட இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து குறித்த விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்