களவாணி பட இயக்குனருடன் கைகோர்த்த நடிகர் அதர்வா.!

Default Image

இயக்குனர் சற்குணம்- நடிகர் அதர்வா கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது. 

பானா காத்தாடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் அதர்வா. இந்த படத்தை தொடர்ந்து பரதேசி, இரும்பு குதிரை, சண்டி வீரன், ஈட்டி ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் பிரபலமானார். மேலும், நடிகர் அதர்வா நடிப்பில் தற்போது குருதி ஆட்டம் மற்றும் தள்ளி போகாதே ஆகிய திரைப்படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. திரையரங்குகள் திறந்தவுடன் இந்த படங்களுக்கான ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், நடிகர் அதர்வா அடுத்ததாக தமிழ் சினிமாவில், களவாணி, நைய்யாண்டி, சண்டிவீரன் போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் நடிகர் அதர்வா அடுத்ததாக ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தில் இவருடன் முன்னணி நடிகரான ராஜ் கிரணும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

படத்திற்கான பூஜை கடந்த மாதம் இறுதியில் நடைபெற்றது. இந்த நிலையில், தற்போது இயக்குனர் சற்குணம்- நடிகர் அதர்வா கூட்டணியில் உருவாகும் இந்த படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. விரைவில் படத்திற்கான மற்ற அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்