அதிமுகவில் இருந்து மேலும் 5 பேர் நீக்கம் – ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு

தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

அதிமுகவுக்கு எதிராக செயல்படுபவர்களும், சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களும் தொடர்ச்சியாக கட்சியில் இருந்து அவர்களை அதிமுக தலைமை நீக்கி வருகிறது. அந்தவகையில் தற்போது மேலும் 5 பேரை கட்சியில் இருந்து நீக்கி, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீசெல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளனர்.

இதுதொடர்பான அறிவிப்பில், கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவபெயரும் உண்டாக்கும் விதத்தில் செய்யப்பட்ட காரணத்தால் தஞ்சை தெற்கு மாவட்டத்தை சேர்ந்த 5 பேர் கட்சியில் இருந்து நீக்கப்படுகிறார்கள்.

அதன்படி, முன்னாள் எம்பி, எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் கு.பரசுராமன், எம்ஜிஆர் மன்ற துணை தலைவர் கோ.ராஜ்மோகன், தஞ்சை நகர கழக செயலாளர் வி.பண்டரிநாதன், ஒன்றிய எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் ஆர்எம் பாஸ்கர், ஒன்றிய சிறுபான்மையினர் நலப்பிரிவு செயலாளர் அருள் சகாயகுமார் ஆகிய 5 பேர் இன்று முதல் கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினர் பதிவில் இருந்து நீக்கப்படுகிறார்கள் என்று அறிவித்துள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்