இன்று தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு டெல்லி பயணம்…!

Default Image

இன்று தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு டெல்லி பயணம்.

தமிழக சட்டப்பேரவையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் திருஉருவ பட திறப்பு விழா ஆகஸ்ட் 2ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், திருவுருவப்படத்தை மாலை 5 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் திறந்து வைக்கிறார்.

இந்நிலையில், சபாநாயகர் அப்பாவு அவர்கள் இன்று  குடியரசுத் தலைவரை சந்திக்க டெல்லி பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின்போது கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்படம் திறப்பு விழாவுக்கான அழைப்பிதழை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களிடம் வழங்க உள்ளார்.

இதற்க்கு முன்னதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், டெல்லி சென்று சட்டப்பேரவை நூற்றாண்டுவிழா, சட்டமன்றத்தில் முத்தமிழறிஞர் கலைஞரின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்தல் உழைத்த சில நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்