133 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்திய அணி..!

Default Image

இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.

இந்தியா, இலங்கை இடையிலான 2-வது டி20 போட்டி இன்று ஆர்.பிரமதாச ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச முடிவு செய்தனர்.

இந்திய அணியின் தொடக்க வீரராக ருதுராஜ் கெய்க்வாட், தவான் இருவரும் களமிறங்கினர். வந்த வேகத்தில் அதிரடி காட்டிய ருதுராஜ் 21 ரன்களில் விக்கெட்டை இழந்தார். பின்னர் பாடிக்கல் களமிறங்கினார். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தவான் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 40 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்து பெவிலியன் திரும்பினார்.

பின்னர் அடுத்தடுத்து களமிறங்கிய சஞ்சு சம்சன் வந்த வேகத்தில் 7, நிதீஷ் ராணா 9  ரன்னில் விக்கெட்டை இழக்க இறுதியாக இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இதனால், 133 ரன்கள் இலக்குடன் இலங்கை அணி களமிறங்கவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்