பனாமா நாட்டில் பயங்கர நிலநடுக்கம்..!-ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவு..!

Default Image

மத்திய அமெரிக்க நாடான பனாமா நாட்டில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.

பனாமா மற்றும் கோஸ்டா ரிக்கா நாடுகள் அமெரிக்காவின் மத்திய பகுதியில் அமைந்துள்ளது. பனாமாவில் அமைந்துள்ள பசுபிக் பெருங்கடலின் கடற்கரையில் 6 மைல் ஆழத்தில் நிலநடுக்கத்தின் மையப்பகுதி உணரப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த பகுதி கோஸ்டா ரிக்கா பகுதியின் எல்லைப்பகுதி என்பதால் அந்த இடத்திலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. இந்த பயங்கர நிலநடுக்கத்தின் சேதங்கள் குறித்த தகவல் வெளியாகவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்