ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்த திரைப்படம் ஓடிடியில் வெளியீடு.?

Default Image

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள ‘திட்டம் இரண்டு’ திரைப்படத்தை ஓடிடி வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அறிமுக இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘திட்டம் இரண்டு’. சிக்ஸர் என்டர்டெயின்மென்ட் மற்றும் வினோத் குமாரின் மினி ஸ்டுடியோஸ் இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளனர். படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

மான்ஸ்டர் மற்றும் மாஃபியா ஆகிய திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஒளிப்பதிவாளர் கோகுல் பெனாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் சதீஷ் ரகுநாதன் இசையமைத்துள்ளார். திடுக்கிடும் மர்மங்கள் நிறைந்த திகில் படமாக இது உருவாகி உள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து ரிலீசாக தயாரிக்கியுள்ளது.

இந்த நிலையில், கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள இந்த ‘திட்டம் இரண்டு’ திரைபடத்தை நேரடியாக சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்ட்டுள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்