பாகிஸ்தானில் லாரி – பேருந்து மோதல்…! 30 பேர் உயிரிழப்பு….!

பாகிஸ்தானில் லாரி மற்றும் பேருந்து மோதியதில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு.
பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தின், தேரா காசி கான் மாவட்டத்தில் நெடுஞ்சாலையில் பயணிகள் பஸ் ஒன்று லாரி மீது மோதியது. இந்த விபத்தில் 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. காயமடைந்தவர்களில் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பேருந்தில் 70-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த பேருந்தில் பயணித்தவர்களில் பலர் ஈத்-உல் ஆஷா பண்டிகையை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். தேரா காசிகான் மாவட்டத்தில் டவுன்சா பைபாஸ் அருகே சிந்து நெடுஞ்சாலையில் தான் இந்த விபத்து நடந்துள்ளது. இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் இரங்கல் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025
வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!
April 25, 2025