அனைத்துக் கட்சி கூட்டத்தில் பேசியது என்ன? டி.ஆர் பாலு விளக்கம்..!

Default Image

மழைக்கால கூட்டத்தொடரில் கொரோனா தொடர்பாக விவாதிப்பார்களா என்ற சந்தேகம் உள்ளது என டி.ஆர் பாலு தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை முதல் ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி வரை நடைபெறும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இதைதொடர்ந்து, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.

அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பின் திமுக மக்களவை குழுத்தலைவர் டி.ஆர்.பாலு பேட்டியளித்தார். அப்போது, பெட்ரோல், டிசல் விலை உயர்வு மேகதாது, நீட் தேர்வு உள்ளிட்ட 13 பிரச்சனைகளை எழுப்ப திட்டம். தமிழ்நாட்டின் பிரச்னைகளை பேச இருப்பது குறித்து தெரிவித்தோம்.  மேகதாது அணை கட்ட மாட்டோம் என்பது தொடர்பாக பிரதமர் நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும்.

பொருளாதார வீழ்ச்சி விவசாயப் பிரச்சினை உள்ளிட்ட 13 பிரச்சினைகள் குறித்து அவையை ஒத்தி வைத்து விவாதிக்க வேண்டுமென திமுக சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் பிரதமர் தனியாக பவர் பாயின்ட் மூலம் விளக்கம் தருவார் என கூறப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம்.

கொரோனா தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினோம். ஆனால், விவாதிப்பார்களா என்ற சந்தேகம் உள்ளது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்படும். 19 நாள் நடைபெற உள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 31 மசோதாக்களை எப்படி விவாதிக்க முடியும் என டி.ஆர். பாலு கேள்வி எழுப்பினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்