இன்று முதல் இதய அறுவை சிகிச்சை மீண்டும் தொடக்கம்., முதல்வர் ரங்கசாமி ..!

Default Image

இதய அறுவை சிகிச்சை இன்று முதல் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் தொடங்கப்படுகிறது என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை ப்ரண்டியர் லைப் லைன் மருத்துவமனையுடன் இணைந்து இதய அறுவை சிகிச்சை துவங்கப்பட்டது. தற்போது வரை 234 இதய அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு இந்தியாவில் பரவத்தொடங்கிய கொரோனா காரணமாக இதய அறுவை சிகிச்சைகள் நிறுத்தி வைக்கப்பட்டது.

தற்போது கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதால் இதய அறுவை சிகிச்சைகள் இன்று முதல் மீண்டும் தொடங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்