காஷ்மீரில் கடந்த எட்டு மாதங்களில் மொத்தம்78 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை ..!

Default Image

காஷ்மீரில் கடந்த 8 மாதங்களில் 78 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

ஸ்ரீநகரின் ஈட்கா பகுதியில் உள்ள ஆலம்தார் காலனியில் இன்று அதிகாலை பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் அடையாளம் தெரியாத இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ஜம்மு-காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர்.

இந்தாண்டு என்கவுண்டர்களில் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் பெரும்பாலோர் தடைசெய்யப்பட்ட அமைப்பான லஷ்கர் தொய்பாவுடன் இணைந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த ஆண்டு கொல்லப்பட்ட 78 தீவிரவாதிகளில் 39 பேர் லஷ்கர் தொய்பாவைச் சேர்ந்தவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர். இந்த ஆண்டு கொல்லப்பட்ட மீதமுள்ள தீவிரவாதிகள் ஹிஸ்புல் முஜாஹிதீன், அல் பதர் மற்றும் பிற  அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என  ஐ.ஜி. விஜய்குமார் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்