அடுத்த 6 மாதத்திற்குள் மீடியாவை கட்டுக்குள் வைக்கலாம் – அண்ணாமலை ..!

அடுத்த 6 மாதத்திற்குள் மீடியாவை கட்டுக்குள் வைக்கலாம் என பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்க உள்ள அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்க உள்ள அண்ணாமலை நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் அக்கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், அடுத்த ஆறு மாதத்திற்குள் நீங்கள் பார்ப்பீர்கள் மீடியாவை கன்ட்ரோல் செய்யலாம், கையில் எடுக்கலாம். காரணம் என்னவென்றால் தொடர்ந்து பொய்யான விஷயங்களை எந்த ஒரு ஊடகமும் சொல்ல முடியாது. முன்னாள் மாநில தலைவராக இருந்த எல்.முருகன் தற்போது தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை இணை அமைச்சராக உள்ளார்.
அனைத்து ஊடகங்களும் எல்.முருகனின் கீழ்தான் வரவுள்ளன. ஏனென்றால் தொடர்ந்து தப்புகள் நடைபெற முடியாது. தப்பான ஒரு செய்தியை தொடர்ந்து செய்ய முடியாது. அதை வைத்து அரசியல் செய்ய முடியாது நிச்சயம் உடைப்போம் என்று தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025