காமராஜர் தேச வளர்ச்சி மற்றும் சமூகத்தை வலிமையடைய செய்ய தன் வாழ்க்கையை அர்ப்பணித்தவர் – பிரதமர் நரேந்திரமோடி

Default Image

காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி ட்வீட்.

முன்னாள் முதல்வர் காமராஜர் அவர்களின் 119-வது பிறந்தநாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ள நிலையில், அவரது உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையும் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திரமோடி தனது ட்வீட்டர் பக்கத்தில், மாபெரும் தலைவர் காமராஜரின் பிறந்தநாளில் அஞ்சலி செலுத்துகிறேன். அவர் தேச வளர்ச்சி மற்றும் சமூகத்தை வலிமையுடைய செய்ய தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். அவர் வலியுறுத்திய கல்வி, சுகாதாரம் மற்றும் பெண்கள் அதிகாரம் ஆகியவை இன்றளவும் இந்திய மக்களுக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வருகின்றன.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்