#BREAKING: புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளிவைப்பு..!

புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளிவைப்பு அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநரிடம் ஆலோசித்த பின்னர் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது மாணவர்கள், பெற்றோர் அரசியல் கட்சியினர் கோரிக்கையை ஏற்று நாளை பள்ளி கல்லூரிகள் திறப்பு இல்லை. பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளிவைப்பு எனவும் கொரோனா குறைந்த பிறகே திறக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் 9, 10,11 ம் ஆற்றும் மற்றும்12 வகுப்புகளும், கல்லூரிகளுக்கும் நாளை  முதல் திறக்கப்படும் என முதல்வர் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.